கவின் சாரலன் - சுயவிவரம்
(Profile)


தமிழ் பித்தன்
இயற்பெயர் | : கவின் சாரலன் |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 15-Jul-2011 |
பார்த்தவர்கள் | : 29166 |
புள்ளி | : 19585 |
மல்லிகை யின்நிறம் மென்மையான வெண்மைதான்
மல்லிகைவண் ணம்மாறி னும்மணம் மாறா
மலர்ரோஜா வுக்குப்பல் வண்ணம் பொருந்தும்
மலர்மல்லி என்றுமேவெண் மை
மல்லிகை யின்நிறம் மென்மையான வெண்மைதான்
மல்லிகைவண் ணம்மாறி னும்மணம் மாறா
மலர்ரோஜா வுக்குப்பல் வண்ணம் பொருந்தும்
மலர்மல்லி என்றுமேவெண் மை
பூவாத தோட்டத்தில் பூத்துவந்த யாப்பூவோ
பூவுக்கு வேலிகட்ட பூமணம்தான் நிற்குமோ
பூவாத தோட்டத்தில் பூத்தயாப்பூ வோஇவள்
தாவும்தென் றல்காற்றே பார்
பூவாத தோட்டத்தில் பூத்துவந்த யாப்பூவோ
பூவுக்கு வேலிகட்ட பூமணம்தான் நிற்குமோ
பூவாத தோட்டத்தில் பூத்தயாப்பூ வோஇவள்
தாவும்தென் றல்காற்றே பார்
செங்கரும்புச் சாரும்இன் செவ்விள நன்நீரும்
திங்களாடும் பூமுகப் பூவிதழ் மீதோடும்
வங்கக் கடலலை மோதிடும் கூந்தலில்
தங்கியிளைப் பாறும்தென் றல்
செங்கரும்புச் சாரும்இன் செவ்விள நன்நீரும்
திங்களாடும் பூமுகப் பூவிதழ் மீதோடும்
வங்கக் கடலலை மோதிடும் கூந்தலில்
தங்கியிளைப் பாறும்தென் றல்
புன்னகைத் தாள்திறந்து பூவிதழ் வாசலிலே
என்னை வரவேற்கும் என்னெழில் காதலியே
கண்ணின் அசைவினில் சொல்லுவது என்னயேழு
வண்ணம்என் நெஞ்சினி லே
புன்னகைத் தாள்திறந்து பூவிதழ் வாசலிலே
என்னை வரவேற்கும் என்னெழில் காதலியே
கண்ணின் அசைவினில் சொல்லுவது என்னயேழு
வண்ணம்என் நெஞ்சினி லே
விழுந்தது கையிலோர்பூ வேண்டியதோர் வெண்பா
எழுதினேன் பாவொன்று ஏழுவண்ண வானவில்போல்
மொழிந்ததுபூ மௌனமாய் நன்றிதமிழ்த் தாயும்
வழுத்தினள் நெஞ்சம் மகிழ்ந்து
தென்றல் கேட்டது சன்னலிடம்
என்னைத் தடுக்கும் இடையே
இந்தக் கம்பி ஏன் ?
தென்றல் தொடும்போது இன்மை
கன்னத்தைக் கம்பியில் இவள்
தேய்க்கும் போதும் இனிமை
சன்னலுக்கு இரண்டு இனிமை
தென்றலே என்றது தென்றல்
கவின்
கட்டளைக் கலித்துறை
மேகத்தின் மீது மிதந்தெங்கும் செல்கிறேன் மின்னலென
மோகத்தின் இன்பமும் மொய்குழல் வண்டாய் முழங்கிநின்றேன்
தேகத்தி னின்பமாய்த் தேன்சுவை பெற்றதாய்த் தேர்ந்துநின்றேன்
ஏகமாய் ஓர விழிப்பார்வை காட்டுவாய் ஏந்திழையே!
- வ.க.கன்னியப்பன்
இடையசைவில் நான்ஓர் இலக்கியம் கற்றேன்
கடைவிழிப் பார்வையில் காதலை நான்கற்றேன்
புத்தகம்போல் புன்னகையில் பொன்னந்தி மாலையின்
அர்த்தமும் நீசொன்னாய் அன்பு