கவின் சாரலன் - சுயவிவரம்

(Profile)



தமிழ் பித்தன்
இயற்பெயர்:  கவின் சாரலன்
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  15-Jul-2011
பார்த்தவர்கள்:  29166
புள்ளி:  19585

என் படைப்புகள்
கவின் சாரலன் செய்திகள்
கவின் சாரலன் - கவின் சாரலன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
23-May-2025 10:46 am

மல்லிகை யின்நிறம் மென்மையான வெண்மைதான்
மல்லிகைவண் ணம்மாறி னும்மணம் மாறா
மலர்ரோஜா வுக்குப்பல் வண்ணம் பொருந்தும்
மலர்மல்லி என்றுமேவெண் மை

மேலும்

அழகிய கருத்தில் மிக்க மகிழ்ச்சி மிக்க நன்றி கவிப்பிரிய பாத்திமா மலர் 06-Jun-2025 2:32 pm
மல்லிகையின் தூய்மையும் மென்மையும் அழகிய வண்ணமுமே நிறங்களில் சிறந்தது வாழ்த்துக்கள் மென்மையான கவிதைக்கு வாழ்த்துக்கள் கவின் . 06-Jun-2025 11:55 am
ரோஜாவின் மணம் மல்லிகையின் மணத்தோடு போட்டியிட முடியாது ---ஆம் உண்மை மல்லிகை என் மன்னன் மயங்கும் பொன்னான மலர் அல்லவா என்ற இனிய பாடலுண்டு அழகிய கருத்து மிக்க நன்றி கவிப்பிரிய டாக்டர் மலர் 05-Jun-2025 9:30 pm
மல்லிகை என்றுமே வெண்மை. ரோஜாவின் மணம் மல்லிகையின் மணத்தோடு போட்டியிட முடியாது. மல்லிகையின் வெண்மையை அருமையாகக் கவி புனைந்துள்ளீர் கவிஞர் கவின் சாரலரே. வாழ்த்துகள். 05-Jun-2025 6:45 pm
கவின் சாரலன் - படைப்பு (public) அளித்துள்ளார்
23-May-2025 10:46 am

மல்லிகை யின்நிறம் மென்மையான வெண்மைதான்
மல்லிகைவண் ணம்மாறி னும்மணம் மாறா
மலர்ரோஜா வுக்குப்பல் வண்ணம் பொருந்தும்
மலர்மல்லி என்றுமேவெண் மை

மேலும்

அழகிய கருத்தில் மிக்க மகிழ்ச்சி மிக்க நன்றி கவிப்பிரிய பாத்திமா மலர் 06-Jun-2025 2:32 pm
மல்லிகையின் தூய்மையும் மென்மையும் அழகிய வண்ணமுமே நிறங்களில் சிறந்தது வாழ்த்துக்கள் மென்மையான கவிதைக்கு வாழ்த்துக்கள் கவின் . 06-Jun-2025 11:55 am
ரோஜாவின் மணம் மல்லிகையின் மணத்தோடு போட்டியிட முடியாது ---ஆம் உண்மை மல்லிகை என் மன்னன் மயங்கும் பொன்னான மலர் அல்லவா என்ற இனிய பாடலுண்டு அழகிய கருத்து மிக்க நன்றி கவிப்பிரிய டாக்டர் மலர் 05-Jun-2025 9:30 pm
மல்லிகை என்றுமே வெண்மை. ரோஜாவின் மணம் மல்லிகையின் மணத்தோடு போட்டியிட முடியாது. மல்லிகையின் வெண்மையை அருமையாகக் கவி புனைந்துள்ளீர் கவிஞர் கவின் சாரலரே. வாழ்த்துகள். 05-Jun-2025 6:45 pm
கவின் சாரலன் - கவின் சாரலன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
23-May-2025 10:14 am

பூவாத தோட்டத்தில் பூத்துவந்த யாப்பூவோ
பூவுக்கு வேலிகட்ட பூமணம்தான் நிற்குமோ
பூவாத தோட்டத்தில் பூத்தயாப்பூ வோஇவள்
தாவும்தென் றல்காற்றே பார்

மேலும்

பாராட்டில் மிக்க மகிழ்ச்சி மிக்க நன்றி கவிப்பிரிய பிரியா 25-May-2025 7:53 am
பூக்களே அசந்து போகும் அளவிற்கு வர்ணனை .......அழகு தமிழில் .... 24-May-2025 12:27 pm
கவின் சாரலன் - படைப்பு (public) அளித்துள்ளார்
23-May-2025 10:14 am

பூவாத தோட்டத்தில் பூத்துவந்த யாப்பூவோ
பூவுக்கு வேலிகட்ட பூமணம்தான் நிற்குமோ
பூவாத தோட்டத்தில் பூத்தயாப்பூ வோஇவள்
தாவும்தென் றல்காற்றே பார்

மேலும்

பாராட்டில் மிக்க மகிழ்ச்சி மிக்க நன்றி கவிப்பிரிய பிரியா 25-May-2025 7:53 am
பூக்களே அசந்து போகும் அளவிற்கு வர்ணனை .......அழகு தமிழில் .... 24-May-2025 12:27 pm
கவின் சாரலன் - கவின் சாரலன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
21-May-2025 11:03 am

செங்கரும்புச் சாரும்இன் செவ்விள நன்நீரும்
திங்களாடும் பூமுகப் பூவிதழ் மீதோடும்
வங்கக் கடலலை மோதிடும் கூந்தலில்
தங்கியிளைப் பாறும்தென் றல்

மேலும்

அழகிய இனிமையான கருத்து மிக்க நன்றி கவிப்பிரிய பிரியா 25-May-2025 7:55 am
அழகு பதுமைக்கு உங்கள் வரிகள் மேலும் அழகு சேர்த்து இருக்கிறது கவின் அவர்களே... 24-May-2025 12:29 pm
கவின் சாரலன் - படைப்பு (public) அளித்துள்ளார்
21-May-2025 11:03 am

செங்கரும்புச் சாரும்இன் செவ்விள நன்நீரும்
திங்களாடும் பூமுகப் பூவிதழ் மீதோடும்
வங்கக் கடலலை மோதிடும் கூந்தலில்
தங்கியிளைப் பாறும்தென் றல்

மேலும்

அழகிய இனிமையான கருத்து மிக்க நன்றி கவிப்பிரிய பிரியா 25-May-2025 7:55 am
அழகு பதுமைக்கு உங்கள் வரிகள் மேலும் அழகு சேர்த்து இருக்கிறது கவின் அவர்களே... 24-May-2025 12:29 pm
கவின் சாரலன் - கவின் சாரலன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
20-May-2025 6:42 pm

புன்னகைத் தாள்திறந்து பூவிதழ் வாசலிலே
என்னை வரவேற்கும் என்னெழில் காதலியே
கண்ணின் அசைவினில் சொல்லுவது என்னயேழு
வண்ணம்என் நெஞ்சினி லே

மேலும்

கவின் சாரலன் - படைப்பு (public) அளித்துள்ளார்
20-May-2025 6:42 pm

புன்னகைத் தாள்திறந்து பூவிதழ் வாசலிலே
என்னை வரவேற்கும் என்னெழில் காதலியே
கண்ணின் அசைவினில் சொல்லுவது என்னயேழு
வண்ணம்என் நெஞ்சினி லே

மேலும்

கவின் சாரலன் - கவின் சாரலன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
13-May-2025 9:18 am

விழுந்தது கையிலோர்பூ வேண்டியதோர் வெண்பா
எழுதினேன் பாவொன்று ஏழுவண்ண வானவில்போல்
மொழிந்ததுபூ மௌனமாய் நன்றிதமிழ்த் தாயும்
வழுத்தினள் நெஞ்சம் மகிழ்ந்து

மேலும்

சற்று மாற்றி நேரிசையில் முயன்றிருக்கிறீகள் நன்று நன்றி எங்கே ? பூ நன்றி மொழிந்தது வழுத்தினாள் தமிழ்த்தாய் என்று பொருளுடன் சொல்லவேண்டும் விழுந்தது கையிலோர்பூ வேண்டியதோர் வெண்பா எழுதினேன் ஓர்தமிழ்வெண் இன்பா - எழில்பூ மொழிந்தது நன்றியை முந்துதமிழ்த் தாயும் வழுத்தினள் நெஞ்சம் மகிழ்ந்து! ---கவிதைக்கு கவிதை இனிமை மகிழ்ச்சி மிக்க நன்றி கவிப்பிரிய டாக்டர் VKK 14-May-2025 10:45 pm
நல்ல முயற்சி. வாழ்த்துகள். ஒரு விகற்ப நேரிசை வெண்பா விழுந்தது கையிலோர்பூ வேண்டியதோர் வெண்பா எழுதினேன் பாவொன் றெழுந்தேன் - செழித்தே மொழிந்ததுபூ மௌனமாய் முந்துதமிழ்த் தாயும் வழுத்தினள் நெஞ்சம் மகிழ்ந்து! 14-May-2025 7:48 pm
கவின் சாரலன் - கவின் சாரலன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
07-May-2025 11:03 am

தென்றல் கேட்டது சன்னலிடம்
என்னைத் தடுக்கும் இடையே
இந்தக் கம்பி ஏன் ?
தென்றல் தொடும்போது இன்மை
கன்னத்தைக் கம்பியில் இவள்
தேய்க்கும் போதும் இனிமை
சன்னலுக்கு இரண்டு இனிமை
தென்றலே என்றது தென்றல்

கவின்

மேலும்

என்றது சன்னல் என்று படிக்கவும் 07-May-2025 11:12 am
கவின் சாரலன் - Dr.V.K.Kanniappan அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
25-Apr-2025 12:32 pm

கட்டளைக் கலித்துறை

மேகத்தின் மீது மிதந்தெங்கும் செல்கிறேன் மின்னலென
மோகத்தின் இன்பமும் மொய்குழல் வண்டாய் முழங்கிநின்றேன்
தேகத்தி னின்பமாய்த் தேன்சுவை பெற்றதாய்த் தேர்ந்துநின்றேன்
ஏகமாய் ஓர விழிப்பார்வை காட்டுவாய் ஏந்திழையே!

- வ.க.கன்னியப்பன்

மேலும்

கட்டளைக் கலித்துறை இனிமை அருமை 25-Apr-2025 10:00 pm
கவின் சாரலன் - கவின் சாரலன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
25-Apr-2025 9:52 am

இடையசைவில் நான்ஓர் இலக்கியம் கற்றேன்
கடைவிழிப் பார்வையில் காதலை நான்கற்றேன்
புத்தகம்போல் புன்னகையில் பொன்னந்தி மாலையின்
அர்த்தமும் நீசொன்னாய் அன்பு

மேலும்

மிக்க நன்றி கவிப்பிரிய டாக்டர் VKK 25-Apr-2025 9:56 pm
இரண்டு வெண்பாக்களுமே மிகச் சிறப்பு! வாழ்த்துகள். 25-Apr-2025 6:10 pm
இடையசைவில் நான்ஓர் இலக்கியம் கற்றேன் கடைவிழியில் காதலை கற்றேன் -- நடையழகில் புத்தகம்போல் புன்னகையில் பொன்னந்தி மாலையின் அத்தனையும் நீசொன்னாய் அன்பு ---இருவிகற்ப நேரிசை வெண்பா எனலாமா ? இடையசைவில் நான்ஓர் இலக்கியம் கற்றேன் கடைவிழியில் காதலை கற்றேன் -- நடையழகில் புத்தகம்போல் புன்னகையில் பொன்னந்தி மாலையின் அர்த்தமும் நீசொன்னாய் அன்பு ---புத் அர்த் ஆசிடை எதுகையாகக் கொண்டு இதை இருவிகற்ப நேரிசைசையாகக் கொள்ளலாமா ? ------யாப்புசார் கருத்தில் மகிழ்ச்சி மிக்க நன்றி கவிப்பிரிய டாக்டர் VKK 25-Apr-2025 3:53 pm
பல விகற்ப இன்னிசை வெண்பா எனத் தலைப்பிட்ட வேண்டும். 25-Apr-2025 10:59 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (405)

சரவணன் சா உ

சரவணன் சா உ

பட்டாக்குறிச்சி
ஜவ்ஹர்

ஜவ்ஹர்

இலங்கை
user photo

இரமி

வேலூர்

இவர் பின்தொடர்பவர்கள் (406)

கீத்ஸ்

கீத்ஸ்

கோவை
வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)

இவரை பின்தொடர்பவர்கள் (415)

காளியப்பன் எசேக்கியல்

காளியப்பன் எசேக்கியல்

மாடம்பாக்கம்,சென்னை

என் படங்கள் (6)

Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image
மேலே