கவின் சாரலன் - சுயவிவரம்
(Profile)
தமிழ் பித்தன்
இயற்பெயர் | : கவின் சாரலன் |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 15-Jul-2011 |
பார்த்தவர்கள் | : 23064 |
புள்ளி | : 18991 |
செவ்வந்திப் போதினிலே செந்தா மரைமலரா
செவ்விதழ் தோட்டமோ பூக்கா பொழுதில்லை
செவ்விளநீர் போலும் குளிர்சிந்தும் உன்பார்வை
கவ்விச்செல் கின்றதென்நெஞ் சை
செவ்வந்திப் போதினிலே செந்தா மரைமலரா
செவ்விதழ் தோட்டமோ பூக்கா பொழுதில்லை
செவ்விளநீர் போலும் குளிர்சிந்தும் உன்பார்வை
கவ்விச்செல் கின்றதென்நெஞ் சை
செஞ்சிவப்பு செவ்விதழ்கள் செவ்வானம் தீட்டியதோ
கொஞ்சும் கருங்கூந்தல் கார்மேகம் நல்கியதோ
அஞ்சன நீள்விழியில் ஆகாய நீலமோ
நெஞ்சத்தின் ஓவிய மே
செஞ்சிவப்பு செவ்விதழ்கள் செவ்வானம் தீட்டியதோ
கொஞ்சும் கருங்கூந்தல் கார்மேகம் நல்கியதோ
அஞ்சன நீள்விழியில் ஆகாய நீலமோ
நெஞ்சத்தின் ஓவிய மே
ஓங்கி உயர்ந்த பனை மரம்
ஒருத்தருக்கும் நிழல் தராது
விரிந்து பரந்த ஆல மரம்
எத்தனை பேர் வெய்யில் மழையைக் காக்கும்
உயரப் பனைமரம்
நொங்கு எனும் இனிய பனம் பழம் தரும்
ஆல விருட்சமே
நிழல் மட்டுமே உன் குடை கொடையோ
ஒருவேளை
ஞானப் பழம் தருவாயோ ?
ஓங்கி உயர்ந்த பனை மரம்
ஒருத்தருக்கும் நிழல் தராது
விரிந்து பரந்த ஆல மரம்
எத்தனை பேர் வெய்யில் மழையைக் காக்கும்
உயரப் பனைமரம்
நொங்கு எனும் இனிய பனம் பழம் தரும்
ஆல விருட்சமே
நிழல் மட்டுமே உன் குடை கொடையோ
ஒருவேளை
ஞானப் பழம் தருவாயோ ?
தேர்தலுக்காக அரசியல்வாதி
வீதியில் மேடையில்
திறந்த கார் ஓட்டையில் நிற்கிறான்
வழக்கிற்காக
நீதிமன்ற கூண்டில் நிற்கிறான்
எங்கள் ஒட்டு நோட்டாவிற்கே
என்கிறார்கள் மக்கள் !
தேர்தலுக்காக அரசியல்வாதி
வீதியில் மேடையில்
திறந்த கார் ஓட்டையில் நிற்கிறான்
வழக்கிற்காக
நீதிமன்ற கூண்டில் நிற்கிறான்
எங்கள் ஒட்டு நோட்டாவிற்கே
என்கிறார்கள் மக்கள் !
சிப்பிக்குள் நல்வெண்முத் துக்கள் சிரித்திடும்
செப்புச் சிலையில்என் தேவி சிரித்திடுவாள்
செப்பலோசை வெண்பாவில் செந்தமிழ்ப் பாசிரிக்கும்
ஒப்பிலா உன்னால் ஒயில்
யாப்புக் குறிப்புகள் :--
செப்பலோசை ----வெண்பாவிற்குரிய ஓசை
நல்வெண்முத்துக்கள் --- நல்வெண்முத் துக்கள் ---வகையுளி
சி து ---இணைமோனை 3 ஆம் சீர் மோனை கருதி
எழுதும் வரிகள் இலக்கியம் ஆகும்
எழுதா விடினுன்னை என்மனம் வாடும்
எழுதும் கவிஞனின் இன்பமே நானும்
எழுதுவேன் ஆயிரம் இங்கு
---ஒரு விகற்ப இன்னிசை வெண்பா
எதுகைகள் : எழு எழு எழு எழு
மோனை 1 3 ஆம் சீரில் எ இ எ எ எ இ எ இ
எழுதாவிடின் ---எழுதா விடின் ----வகையுளி
நானா எழுதுகிறேன் நின்னை நிலவெழிலே
பேனா எழுதுது பெண்ணேநின் பேரழகை
மானே மயிலினி மௌனமென் புன்னகையே
தேனாகச் சொட்டுது செந்தமிழ்ச் சொல்லமுது
நானா எழுதுகிறேன் நற்றமிழ் பூங்கவிதை
பேனாவில் பாயும் புனல்
----ஒரு விகற்ப பஃறொடை வெண்பா
எதுகை நானா பேனா மானே தேனா நானா பேனா
மோனா 1 3 ஆம் சீரில் ந நீ பே பெ ம மெ தே செ நா ந பெ பு
வாக்குச் சேகரிக்கச் சென்று வந்த தந்தையிடம் அவரது மகன்:
அப்பா, இன்னிக்கு அதிகாலை அஞ்சு மணிக்கே வாக்குச்
சேகரிக்கப் போனயே . இப்ப மணி பத்து ஆகுது.தொகுதில எந்த
எந்தப் பகுதிக்குப் போன?
நம்ம தொகுதில கிராமங்கள் அதிகம். ஏமாந்தான்பட்டிக்கு வாக்குச்
சேகரிக்கப் போனேன். காலைலே பெண்கள் வாசல் பெருக்கிக்
கோலம் போட வர்வறவங்களப் பார்த்து வாக்குக் கேட்பதே எனது
திட்டம். ஆனால் என்னப் பார்த்ததும் அந்த ஊரில் உள்ள பெண்கள்,
"ஐயா, நீங்க செயிச்சா எங்க கிராமத்துக்கு என்னென்ன
செய்வீங்க?"னு கேட்டாங்க."உங்கள் தேவைகள் அனைத்தையும்
நிறிவேற்றுவேன்"னு உறுதி அளித்தேன்.
"சில தொகுதிகள்ல